அறிமுகமான நாளில் தெரியாது
அவன் என் உயிர்த் தோழன்
ஆவானென்று.
பள்ளியின் இறுதி நாளில்
நினைக்கவில்லை
அன்றுடன் அவனுடனான
நட்பு முடியுமென்று.
முறிந்த என் கிளையில்
அமர்ந்தால் அது உடைபடுமே
என்று வருந்தாதே.
உடைபடாதவாறு அமர் என
நான் சொல்லப்போவதில்லை.
ஆனால் அதை நீ
உணர்ந்திருக்க வேண்டும்.
**** நண்பர்கள்தின வாழ்த்துக்கள் என்னைத் தொலைத்தவர்களுக்கும், நான் தொலைத்தவர்களுக்கும் சேர்த்தே ****
1 comment:
என்னைத் தொலைத்தவர்களுக்கும், நான் தொலைத்தவர்களுக்கும் //
நாம் தொலைத்தவர்கள் மனதில் நிழலாட, நம்மைத் தொலைத்தவர்களின் நினைவில் இருப்போமா...?
Post a Comment