வாழ்க்கைக் குறித்த
நம் விருப்பம்
உதிர்ந்த
மறுக்கணத்தில்
துளிர்க்க
ஆரம்பிக்கிறது
நம் குறித்த
வாழ்க்கையின் விருப்பம்.
மௌனத்தை சம்மதம் எனக்
கொள்ளலாமா?
என்று கேட்கிறேன்.
மௌனத்தை
மௌனம் எனவும்
கொள்ளலாம் என்கிறாய்!
தாகத்திற்கு அள்ளிப்
பருகினேன்.
தீர்ந்துபோனது
நதியின்
ஆயிரம் மைல்
பயணத் தாகம்
கேள்வி கேட்கும்
குழந்தைகள்
என்னவோ
தெளிவாகத்தான்
கேட்கிறார்கள்.
பதில் சொல்ல வேண்டிய
பெரியவர்கள்தான்
குழம்பிவிடுகிறார்கள்.