Sunday, August 31, 2014

தேவதையின் தரிசனம்


நீ எப்போதாவது 
தேரடியில் நடந்துவரும் 
அழகைக் காணவே 
எப்போதும் காத்திருக்கின்றன 
கோபுரத்து பாவைகள்!!!


Tuesday, August 26, 2014

கவிஞனின் வெட்கம்


கவிதை என்னவோ 
உன்னைப் பற்றியதுதான்.
ஆனால்-
கன்னம் சிவந்ததோ 
எனக்கு!!!




Sunday, August 24, 2014

கடவுளா? மிருகமா?


என்னில் காணும் தெய்வத்தைக்
கண்டு ஆச்சரியம் கொள்வதாக
சொல்கிறாய்.
ஆனால்-
அது மிருகத்தின் மாறுவேடம்
என்பதை உன்னிடம்
சொல்ல நினைப்பது
என்னுள்ளிருக்கும்
கடவுளா? மிருகமா?