நதியில் விழுந்த இலை
Sunday, August 31, 2014
தேவதையின் தரிசனம்
நீ எப்போதாவது
தேரடியில் நடந்துவரும்
அழகைக் காணவே
எப்போதும் காத்திருக்கின்றன
கோபுரத்து பாவைகள்!!!
Tuesday, August 26, 2014
கவிஞனின் வெட்கம்
கவிதை என்னவோ
உன்னைப் பற்றியதுதான்.
ஆனால்-
கன்னம் சிவந்ததோ
எனக்கு!!!
Sunday, August 24, 2014
கடவுளா? மிருகமா?
என்னில் காணும் தெய்வத்தைக்
கண்டு ஆச்சரியம் கொள்வதாக
சொல்கிறாய்.
ஆனால்-
அது மிருகத்தின் மாறுவேடம்
என்பதை உன்னிடம்
சொல்ல நினைப்பது
என்னுள்ளிருக்கும்
கடவுளா? மிருகமா?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)