Sunday, November 23, 2014

நாத்திகம் VS பகுத்தறிவு


நாத்திகம்தான் பகுத்தறிவு என
எண்ணிக் கொண்டிருக்கும் மூடர்
ஒருபோதும் அறியார்
கடவுள் உண்டென்றும்;
இல்லையென்றும்.


Tuesday, November 11, 2014

பூவிதழ்


உன் இதழ்களின் மீது 
வட்டமிடும் சிறு 
வண்ணத்துப்பூச்சி 
என் இதழ்.




Tuesday, November 4, 2014

காதல் பெருமழை



நீ குடை
கொண்டுவருவாய் என நானும்
நான் குடை
கொண்டுவருவேன் என நீயும்
இறுதி வரையில்
நனைந்தே திளைக்கிறோம்
இப்பெருமழையில்.