Wednesday, October 19, 2011

சுகமான நினைவுகள்


 வலிகளின்றி
வாழ்வேது?
வலிகள்
அனைத்தும் 
உன்னையே
நினைவுருத்துவதால் 
இந்த வாழ்வே 
சுகமின்றி 
வேறேது?

Monday, October 17, 2011

மௌனம்


உண்மையின் 
கல்லறை 
மௌனம்

Wednesday, October 12, 2011

கடவுளும் சாத்தானும்



குடித்திருப்பவனும்,
குடிக்க அழைக்கப்பட்டாலும் 
குடிக்காமல் 
கண்ணியம் காப்பவனும் 
கலந்துரையாடுகிறார்கள்
கடவுளையும் சாத்தானையும் பற்றி.
மது அருந்தும் சாத்தான் 
தான் அருந்துவது அமிர்தம் என்கிறது.
வேடிக்கை பார்க்கும் 
கடவுளுக்கே தெரியும்
அது விஷம் என்று. 
கடவுளுக்கு பகிர்ந்தளித்து 
சாத்தான் தெய்வத்தன்மை 
அடைய முயல்கிறது 
நரகத்தின் ஒரு படி முன்னேறி.
விஷம் எனும் அமிர்தம் தவிர்த்து 
சாத்தானை தோள் சாய்த்து 
அழைத்துப் போகிறார் கடவுள் 
சொர்கத்தின் ஒரு படி கீழ் இறங்கி.


Saturday, October 8, 2011

பல்லக்கு


பனித்துளி சுமக்கும் 
பல்லக்கு 
இலை

Sunday, October 2, 2011

நேசம்


நான் 
என்னை நேசிப்பதே 
நீ 
என்னை நேசிப்பதால்தான்!