புதிதாகப் பள்ளியில்
சேர்ந்திருக்கும்
என் மகள்
நான் அலுவலகம்
சென்று திரும்பிய
ஒரு மாலைப் பொழுதில்
ஓடி வந்து கேட்கிறாள்,
"அப்பா! இன்னிக்கு
உங்க டீச்சர் புதுசா
என்ன rhymes சொல்லிக் கொடுத்தாங்க" என்று.
குழந்தைகளின் உலகம்தான்
எத்தனை அழகாய் இருக்கிறது -
அவர்களின் அழகான புரிதல்களைப் போல!