Thursday, April 11, 2013

மனிதன் படைத்த கடவுள்

 
கடவுள் படைத்த
மனிதனுக்கு மட்டும்
பசி,
கல்வி,
மதிப்பெண்,
காதல்,
அலுவல்,
திருமணம்,
லௌகீகம்,
குழந்தையின்மை,
குழந்தையின் எதிர்காலம்,
நிச்சயமற்ற வாழ்க்கை,
முதுமை
என எண்ணில்லடங்கா பிரச்சனைகள்.
கடவுளைப் படைத்த
மனிதன்
அவனுக்கு 
வெறுமனே
இரு மனைவி
பிரச்சனையை மட்டும்
கொடுத்து
திருப்தி கொண்டான்!!!
 

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கடவுள் தப்பித்தார்

G.M Balasubramaniam said...


இரு மனைவிகள் மட்டும்தானா.....

kowsy said...

சிரிப்பாகவும் சிந்திக்கவும் செய்கின்றது

Post a Comment