Thursday, May 17, 2012

மழைத்தேடல்



விளையாட்டாய்
கடலில் கால்
நனைத்துச் சென்றுவிட்டாய்.
மழையாய் மாறி
உனைத் தேடும்
கடலின் பரிதவிப்பை
நான் மட்டுமே அறிவேன்.


3 comments:

அனைவருக்கும் அன்பு  said...

கடல் மழையாய் மாறி காதலை தேடுகிறதா ?

என்ன ஒரு சிந்தனை !!!! ஆச்சர்யத்தின் விளிம்பில் இருக்கிறேன் உங்கள வரிகளை உள் வாங்கியதில் வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

அழகான குட்டிகுட்டிக் கவிதைகளாக எழுதி அசத்துகிறீர்கள் நாகசுப்பிரமணியம். வாழ்த்துக்கள்.

Unknown said...

மழைக்குப் புதுவண்ணம் கொடுத்திருப்பது அழகு!!

Post a Comment