Saturday, June 29, 2013

அனுமானம்


 
அந்திப் பொழுதில்
அலுவல் முடிந்து
வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தேன்.
ஒரு மர நிழலில்
அவள் அவனிடம் ஏதோ சொல்லி
அழுதுக்கொண்டிருந்தாள்.
என் மனதில்
ஏதேதோக் கதைகள்
கிளைக்கத் தொடங்கின -
அவர்களுக்கு மட்டும்
தெரிந்த அந்த
உண்மைக்கதையைத் தவிர!
 
 
 
 

1 comment:

Post a Comment