Saturday, November 3, 2012

குழந்தைகளின் அழகிய உலகம்



புதிதாகப் பள்ளியில் 
சேர்ந்திருக்கும் 
என் மகள் 
நான் அலுவலகம் 
சென்று திரும்பிய 
ஒரு மாலைப் பொழுதில் 
ஓடி வந்து கேட்கிறாள்,
"அப்பா! இன்னிக்கு 
உங்க டீச்சர் புதுசா 
என்ன rhymes சொல்லிக் கொடுத்தாங்க" என்று.
குழந்தைகளின் உலகம்தான் 
எத்தனை அழகாய் இருக்கிறது -
அவர்களின் அழகான புரிதல்களைப் போல!



1 comment:

நம்பிக்கைபாண்டியன் said...

ரசிக்க வைத்த கவிதை:):):)

Post a Comment