Wednesday, March 21, 2012

இது உங்க டைரியா பாருங்க!



     புத்தகக் கடையில் சற்றே யதார்த்தமாக கண்ணில் பட்டது அந்த புத்தகம். புத்தகத்தின் தலைப்பே அதை எடுத்து ஒரு முறையேனும் புரட்டத் தோன்றும். அப்படிப் புரட்டிய போது, என்னை வசீகரித்த விஷயம் அதன் எழுத்தாளார்கள். நண்பர்கள் மூவர் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள். பொறியியல் பட்டதாரிகளான அவர்கள், பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தும் எழுத்தை கைவிடாது அதை செம்மையானா புத்தகமாகக் கொண்டுவந்தது பல இளைஞர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்று. ஒரு எழுத்தாளர் பதிப்பகத்தாரின் மகன் எனினும், எழுத்து நடை எந்த இடத்திலும் சோர்வாக இல்லாமல் அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கின்றனர்!

    உங்களுக்குகாக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து உதவிய நண்பர்களை நினைவு கூர்ந்தது உண்டா? உலகை திரும்பி பார்க்க வைத்த சாதனை செய்து, பின்வரும் நாட்களிலே இந்த உலகம் அதை மறந்து புறக்கணித்து அந்த வெறுமையை எதிர்கொண்டது உண்டா? இவள் நமக்கானவள் என முடிவு செய்து, அதை அவளிடம் கூறிய பின் அவளது புறக்கணிப்பு உங்களை வாழ்வில் மற்றுமொரு தளத்திற்கு அழைத்து சென்று, வாழ்வில் பின்னொரு நாளில் இனிமையான தினத்தில் அவளை சந்தித்த அனுபவம் உண்டா?

     தங்கள் தந்தை செய்து வரும் தொழிலை, தங்கள் அனுபவம் கொண்டு முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமான தருணம் நினைவிருக்கிறதா? தங்கள் கனவை வெறியோடு துரத்தி அதை அடைந்த ஆனந்தம் இருக்கிறதா? சிறு வயதில் பெற்றவர்களுடன் போராடி மீன் வளர்த்த அனுபவம் உண்டா ? சரக்கடித்துவிட்டு காதலியை பற்றி நண்பன் தங்களிடம் புலம்பியது உண்டா? ஒரு பின்தங்கிய சமுதாயம் ஒரு பெண்ணின் கல்வி ஆசையாய் மறுத்து அவளை ஒதுக்கிய சம்பவம் அறிந்தது உண்டா?  தங்களின் காதலியிடம் காதலை சொல்ல பரிதவித்து, ஆயிரமாயிரம் தயக்கங்களுடன் அவளிடம் காதலை சொன்ன அனுபவம் உண்டா?

    இதில் எந்த அனுபம் இல்லாவிடினும் இந்த புத்தகத்தை படித்து ரசிக்கலாம். எதிர்மறையான முடிவுகள் தர வாய்ப்பு இருந்தும், அத்தனை கதைகளையும் நேர்மறையாக முடித்துள்ளது பாராட்டுதலுக்குரியது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் என வகைப்படுத்த முடியாவிட்டாலும், பயணங்களில் படிக்க ஏதுவான புத்தகம்.


நூல் விவரம்:

பெயர்: இது உங்க டைரியா பாருங்க!

ஆசிரியர் : கே.பி.கார்த்திக், பு.கார்த்திகேயன், பா.சீனுவாசன்.

வெளியீடு: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

விலை: ரூ. 100 /-



    

4 comments:

ஆர்வா said...

அடடே.. இப்படி ஒரு டைட்டிலா? வாங்கிட்டா போச்சு

நட்புடன்
கவிதை காதலன்

Seeni said...

nalla pakirvu!

Unknown said...

hm interesting.

Unknown said...

இதில் நீங்கள் சொன்ன அனுபவங்கள் அனைத்தும் உள்ளன, என்னிடம் ஆனாலும் படிக்க தோனுகிறது, எந்த விஷயங்களையும் சொல்லும் முறை வேறு படும் அல்லவா படித்து பார்ப்போமே :)

Post a Comment