Wednesday, October 6, 2010

நன்நம்பிக்கை



     மனுஷன் பெரும்பாலான நேரங்களில் நிம்மதியாய் இருப்பதற்கும்,  இல்லாமல் இருப்பதற்கும் நம்பிக்கை மட்டுமே காரணம் என நான் நம்புகிறேன்.

     நம் கருத்து வலுக்க வேண்டும் என்பதில் அனைவருக்குமே ஒரு ஆர்வம் உண்டு. ஆனால் நம் நம்பிக்கையின் மீது நாம் கொண்டுள்ள ஆர்வம் மற்றவர்களின் நம்பிக்கையை உடைக்கிறதா என்று என்றாவது சிந்தித்து உள்ளோமா என்றால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்பது கூடவாக இருக்காது  வெறும் மௌனமே பதிலாக இருக்கும்.

     நானும் பல சமயங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு கதை என் எண்ணத்தை முற்றிலுமாக மாற்றி விட்டது.



     "அவன் ஒரு தொல்பொரு ஆய்வாளன். நாட்டில் உள்ள பல்வேறு  கோவில்களுக்கு  சென்று அதை ஆய்வதே அவன் பணி. அப்படி அவன் ஒரு ஊருக்கு செல்லும் போது, அந்த ஊரில் உள்ள ஒரு முதியவர் அவனை தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு சொல்கிறார் அவனும் மறுக்க முடியாமல் ஒத்துக்கொள்கிறான்.

     முதல் நாள் அவன் அலுவல் முடிந்து வீடு திரும்பிய போது அந்த வீட்டு தோட்டத்தில் ஒரு பெண் செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருப்பதை பார்க்கிறான்; காமம் தலைக்கு ஏறுகிறது. அப்போது அந்த வீட்டுக்குள் நுழையும் முதியவர் அதை பார்த்துவிடுகிறார் . அவர் வரவை சற்றும் எதிர் பாராத அவன் அதிர்சிக்குள்ளாகிறான்; தன் தவறை உணர்கிறான்.

     அன்றிரவு யாரோ கதவு தட்டும் ஓசை கேட்க, போய் திறக்கிறான். திறந்தவனுக்கோ பேரதிர்ச்சி. அந்த முதியவரின் மகள் புது மணப்பெண் மாதிரி  ஏதோ முதலிரவுக்கு வருவது போல வந்தி்ருந்தாள். உள்ளே நுழைந்த அவள், அவனின் முகத்தைப்  பார்த்த உடனேயே அவன் எழுப்ப வந்த கேள்வியை புரிந்து கொண்டு அவனிடம்," இல்ல, எங்க அப்பா அம்மா ரொம்ப வருஷம்மா குழந்தையே இல்லாம இருந்தாங்க. அப்ப, எங்க அப்பா வேண்டிக்கிட்டராம் இத மாதிரி ஆம்பள குழந்த பிறந்தா அவன கோவிலுக்கே நேர்ந்து விட்டுரராதவும், பொண்ணு பிறந்தா அவள தேவதாசியா ஆக்கிரராதவும் வேண்டிக்கிட்டார். அதனால என் மேல ஆசைபட்டவர்களை திருப்தி படுத்தறது தான் என் கடமை."
 
     இதை கேட்டதும் அவன், "இதெல்லாம் ஒரு பொழப்பா? உங்க அப்பனுக்கு தான் புத்தி இல்ல , உனக்கும்மா இல்ல? ....................." என்று திட்டினான். உடனே அவளும் அழ ஆரம்பித்தவள்,  இரவு முழுவதும்  அழுது கொண்டே இருந்தாள். சரி, இதுக்கு மேலேயும் அவளை திட்ட வேண்டாம் என கருதி அவன் தூங்க செல்கிறான். காலையில் விழித்து பார்த்தால் அவள் தூக்கில் தொங்கி கொண்டிந்தாள் என கதை முடியும்.



     அவளோட நம்பிக்கைய சுலபமா உடைக்க முடிஞ்ச அவனுக்கு அதுக்கு பதிலா வேற ஒரு நம்பிக்கைய அவளுக்கு ஏற்படுத்தி    கொடுக்கத் தெரியல. அப்படி அவன் வேற ஒரு ஒரு சரியான நம்பிக்கைய கொடுத்திருந்தா அவளும் நம்பிக்கையா வாழ்கையை  வாழ்ந்திருப்பாள்.

     இந்த கதைல மட்டும் இல்ல , நிஜத்திலையும் பல பேர் அப்படித் தான் இருக்காங்க. தன் கோபங்களை, ஆசைகளை, ஏக்கங்களை மற்றவர்களின் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவனை/அவளை அவர்களுக்காகவே நேசிப்பவர்கள் சிலரே. கணவன் மனைவின் மீது, பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது, காதலன் காதலியின் மீது இப்படி பலரும் பலரது நம்பிக்கையின் உடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

     என் நம்பிக்கைகளிலும் பல பேர் பல தருணங்களில் கை வைத்திருக்கிறார்கள். அதனால் நான் பாதித்தும் உள்ளேன். அப்போது தான் யோசித்தேன்,  இந்த விசயத்தில் மட்டும் இனி எதற்காகவும் விட்டுக்கொடுக்க போவதில்லை என்று. அதனால் மற்றவர்களிடம் நான் வாங்கிய பெயர் "திமிர் பிடித்தவன்" என்று.

     ஆமாம் நான் திமிர் பிடித்தவன் தான். ஆனால் திமிர் என் ஆயுதம் அல்ல கேடயம்!

2 comments:

Subeeshkumar S said...

This is what a story is...! Keep give some more stories but with good endings.............!!!!!!!

Anonymous said...

very nice .

Post a Comment