Saturday, March 2, 2019

Pencil கிழவன்



ஏதோ ஒன்றை வரைய 
பென்சிலைத் தேடிக் 
கொண்டிருக்கும் அச்சிறுவனிடம் 
கிடைக்கிறது அவன் பிஞ்சுக் 
கைகளுக்குள்கூட அகப்படாத 
சிறு பென்சில்.
தன்னால் கூர்தீட்டிட முடியாத 
அப்பென்சிலைத் தன் தாத்தாவிடம் 
கூர்த்தீட்டிட கேட்கிறான்.
உடலும் சில நினைவுகளும் மட்டுமேயுள்ள 
இரு கிழவர்களும் ஒருவரை ஒருவர் 
பார்த்துக் கொள்கின்றனர் 
மிக அமைதியாக....