வேண்டுவதெல்லாம்
நரைகூடும் வயதிலும்
நரைத்திடாத காதல்தான்!
எதிர்பார்ப்பை தட்சணையாக
பெற்றுக்கொண்டு
வாழ்க்கையைக்
கற்றுக்கொடுப்பதால்
காதலும்
துரோணரே!
உன் ஒவ்வொரு
அடி விலகலுக்கும்
உதிர்கிறது
என் மனச்சிறகின்
ஒவ்வொரு இறகு!
தொலைதூரம்
பிரிந்திருந்தாலும்
உன்னைச் சுற்றியே
நகர்கிறது
என்
காதல் நிலவு !