Thursday, December 6, 2012

அம்மாவும் என் காதலிகளும்...


சிறு வயதில்
என்னவென்றே
தெரியாமல்
நான் நடித்த நாடகத்தில்
என் மனைவியாக
நடித்த
ரசிதா
இன்றும் கனவில் வந்து
கேலி பேசுகிறாள் -
இப்போது வரை அவளிடம்
பேசியதில்லை என்று.
ஒரே தெருவில்
வசித்திருந்தாலும்
ஒருவருக்கு ஒருவர் 
பிடித்து 
இருந்தாலும்
காதல் சொல்லாமலே
விலகி சென்ற என்னை
கேள்வி கேட்டு
கனவில் துரத்திக்
கொண்டிருக்கிறாள்
தோழி காவ்யா.
என் காதலை ஏற்காமல்
நிராகரித்த கல்லூரி தோழி
லக்ஷ்மி நிதம் கனவில்
வந்து காதல் பேசுகிறாள்.
ஆனால் -
இத்தனை ஆண்டுகள்
சேர்ந்து இருப்பினும்
வார்த்தைகளால்
அன்பை பரிமாறிக்கொள்ளவில்லை
நானும் என் அம்மாவும்
கனவிலும் கூட!  


1 comment:

Yaathoramani.blogspot.com said...

கிடைத்து விட்டது அல்லது
எப்படித்தான் கண்டு கொள்ளாமல் போனாலும்
இந்த அன்பு நிரந்தரமாக பூரணமாகக் கிடைக்கும்
என்கிற நம்பிக்கையினால் விளைந்த அலட்சியமாக
இருக்கலாமோ ?
வித்தியாசமான அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment